வியாழன், 24 ஜூன், 2021

புனைவு - இருளோடு உறவாடிய பொழுதுகள் - பகுதி - 2 (அறிமுகம்)

(குறிப்பு : புனைவு எழுத்துகளில் உண்மையைத் தேடாதீர்கள். கொஞ்சம் உண்மையும், நிறையக் கற்பனையும் கலந்த நெடுந்தொடர்)


மத்தியான வேளையில் தின்னச் சோறு செரிக்கிற இடைவெளியில் நடக்கிற திண்ணை பேச்சில் தான் இந்த மாமாஜி அறிமுகமானான். அது நடந்தே இருக்காவிடில்... என் வாழ்வின் இருண்ட பக்கங்கள் ஏதுமேயில்லாமல் போயிருக்கலாம்...!

மணிக்கணக்கில் பேசும் என்னுடைய பேச்சுக்கென்று கவனிப்பாளர்கள் இருந்தார்கள்... வந்தான் சட்டென்று மடைமாற்றிப் போனான்... அயோக்கியன்..முகர்ஜி.!

அந்த நாளில்.... அண்டை அயலக கடைகளில் கிடைக்கும் 5 முதல் 10 சதவிகிதம் வரையிலான விலை மலிவு பற்றியும், வணிக வளாகங்களிலும், தொடர் பல்பொருள் அங்காடிகளிலும் கிடைக்கிற கழிவுகள் பற்றிய விவாதம்...!

சட்டென்று வந்தான்... சொன்னான்... என்ன சேமிப்பு உங்களுக்குக் கிடைக்கும்...! நூறு வெள்ளி ஓர் ஆண்டுக்கு இருக்குமா...!? ஏன்? இதைப்பற்றி இவ்வளவு கவலைப்படுகிறீர்கள்...!? உங்கள் ஊதியம் அடுத்த ஆண்டு 10 சதவிகிதம் உயர வேண்டும் என்று கவலைப்படுங்கள்...! அது இந்த சில்லறை தேற்றுவதை விடுவதை உன்னதமானது...!

அவனை அப்பொழுதான பார்க்கிறேன்... ஆறு அடிக்குக் குறைவில்லா உயரம், மங்கோலிய மஞ்சள் நிறம், பெருத்த தொப்பை... சிரித்த முகம்... எல்லாவற்றையும் இலவாக அணுகும்.... பண்புடன்.... ஒரு மனிதன்... என்னோடு முரண்படுகிறான்...!

அடுத்த ஆறு மாதங்களில் அவனோடு ஈசிக்கொண்டிருக்க போகிறேன் புதுசா கட்டிக்கொண்ட மனையாளைப் போல என்பது அறியாமல்... தொண்டைக்குழியின் நீர் வறள விவாதம்..!

பச்சோந்திகள்... என்னோடு இருந்தவர்கள்... புதிதாய் வந்தவனுக்குத் தட்டிய ஜல்ராவில்... ஒன்று மட்டும் உண்மை...! இங்கே வாய்ப்புக்கிடைத்தால் அத்தனை அயோக்கியத்தனத்தைச் செய்ய இந்த மக்கள் தயார்.. அதற்கு ஒன்றே ஒன்று மட்டும் தான் விலை...! சமூக அங்கீகாரம்... அதை விலைகொடுத்து வாங்கி விட முடிந்தால்... எதையும் செய்யத் துணியும் இந்த கூட்டம்...!

முந்தைய பகுதி...

https://pktpaariarasu.blogspot.com/2021/06/1.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails