ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

பழையன கழிதலும் புதியன புகுதலும்



நேற்றைய பதிவிலிருந்து ... மூன்று விதமான கருத்துகள் வந்தன.
1. நேர்மறை - நிறையப் பாராட்டுகள் பதிவு நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளத் தூண்டுகோலாக இருக்கிறது.
2. சமூக அக்கறை மற்றும் கவலை - புதிய தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தும் வேலையிழப்புகள் மற்றும் சமூக உளவியல் சிக்கல்கள்.
வேலையிழப்புகள் பற்றி இன்னொரு பதிவில் விரிவாகப் பேச வேண்டும்.
3. வசவாளர்கள் - இந்தியப் பொருளாதாரம் சரிந்துகொண்டிருக்கிறது. இங்கே அடிப்படை வசதிகளே இல்லை இதில் புதிய தொழில்நுட்பங்கள் என்ன செய்யப் போகின்றன. பதிவு போலியான நம்பிக்கையை ஊட்டுகிறது.

பதிவு இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றியோ (அல்லது) புதிய தொழில்நுட்பங்கள் இந்தியாவை முன்னேற்றும் என்றோ எழுதப்படவில்லை.

பொறியியல் துறையைப் பற்றி ஒரு நம்பிக்கையின்மை ஊகச்செய்தியாக பரப்பப்படுகிறது, குறிப்பாகத் தகவல் தொழில்நுட்ப துறை வீழ்ந்துக்கொண்டிருப்தாக அது உண்மையில்லை என்பதை விளங்குவதே முக்கிய நோக்கம்.

இரண்டாவதாக மனித வள மேம்பாடு, இனி வரும் காலங்களில் மூளை சார்ந்த வேலைகள் அதிகரிக்கும். உடல் சார்ந்த திரும்ப, திரும்பச் செய்யப்படும் வேலைகள் முழுவதுமாக ஒழிக்கப்படும்.

இந்த புதிய தொழில்நுட்பங்கள் மனிதவள தேவையிருக்கிற நாடுகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும். மிக முக்கியமாக ஜப்பான், கொரியா மற்றும் சிங்கப்பூர் போன்ற மூப்படையும் சமூகத்தைக் ( Population ageing) கொண்ட நாடுகள்.

அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் மூன்றாம் மற்றும் நான்காம் தலைமுறை குடியேறி வாரிசுகளின் (3rd / 4th generation immigrants complexities) சிக்கலை எதிர்கொள்ளும் நாடுகளும் மனித வள தேவை ஏற்படும்.
(குடியேறிகளின் மூன்றாம் மற்றும் நான்காம் தலைமுறையினர் 60 சதவிகிதம் அறிவியல் திறனற்றவர்களாகவும் மற்றும் ஊதாரிகளாகவும் இருப்பது).

இந்த மனிதவள தேவையை இந்தியா சரியாகப் பயன்படுத்த புதிய தொழில்நுட்பங்களில் பயிற்சியும், அறிவும் பெற வேண்டியது அவசியம்.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய இளைய சமூகத்தைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. ஏறக்குறைய 35 சதவிகிதம் இளையர்கள்.

இந்தியாவும் அதன் பெரு நகரங்களும் மக்கள் தொகை பெருக்கத்தால் திணறிக்கொண்டிருக்கிறது. சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் காலையில் 7 மணிக்கு வேலைக்கு கிளம்புகிறவர்கள் 10..30 அல்லது 11 மணிக்கு தான் அலுவலகம் வந்து சேர முடிகிற அளவுக்கு நெருக்கடி நிலவுகிறது.

பெருகிக்கொண்டிருக்கிற மக்கள் தொகைக்கு ஏற்ப நில மற்றும் நீர் வளங்கள் இந்தியாவில் இல்லை.

இருக்கிற ஒரே தீர்வு மனிதவளத்தை ஏற்றுமதி செய்வது தான். ஒவ்வொரு ஆண்டும் 1 கோடி பேர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். 2030 -க்குள் 10 கோடி பேர் இந்தியாவை விட்டு கட்டாயம் வெளியேறி ஆக வேண்டும். இல்லையென்றால் நில மற்றும் நீர் வள பற்றாக்குறையால் மிகபெரிய சமூக அவலங்கள் நடந்தேறும்.


புதிய தொழில்நுட்பங்களை இளையர்களுக்குப் பயிற்றுவிப்பதன் மூலம், இந்தியாவில் இருக்கும் அதிகமான மனிதவளத்தை மனிதவள தேவையிருக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

அரசுகள் மனிதவள ஏற்றுமதியில் கவனம் செலுத்துவதன் மூலம் மட்டுமே... எதிர்கால சிக்கலைத் தீர்க்க முடியும்!.

அன்புடன்
பட்டுக்கோட்டை பாரி.அரசு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails