சனி, 30 மே, 2020

வீழ்ச்சிக்கு பின்...1

நண்பர்கள் சிலருடன் அலைபேசி வாயிலாக உரையாடிக்கொண்டிருந்தபொழுது, இந்த நோய்த்தொற்று (covid-19) முடக்கத்தினால் வந்த வீழ்ச்சிக்குப் பின்பு ஒரு எழுச்சி ஏற்படுவதைப் பற்றிய உரையாடல் நிகழ்ந்தது. 

ஒவ்வொரு வீழ்ச்சியும், ஒரு புதிய தொடக்கத்தின் ஆரம்பம் தான்...

ஏற்கனவே 6 மாதங்களுக்கு முன்பு வரப்போகிற தொழில்நுட்ப மாற்றங்களை ஒட்டி ஒரு பதிவு எழுதி இருந்தேன்
(மாற்றங்களுக்குத் தயாராகுங்கள்...)https://pkt-paari-arasu.blogspot.com/2019/09/blog-post.html

ஊதியம், வேலைவாய்ப்பு

வளர்ந்த நாடுகளில் அறிவு மற்றும் நுழைபுலன் ( Knowledge & intelligence) சார்ந்த வேலைகளுக்கு 20% இருந்து 100%  வரை ஊதிய உயர்வு நிகழும்.  எல்லைகள் மூடப்பட்டிருப்பதால் எழுகிற மனித வள பற்றாக்குறையும், புதிய அலையாக எழுகிற தேசிய பார்வைகளும் இந்த ஊதிய உயர்வை உந்தி தள்ளும்.

ஏற்கனவே ஜப்பான்,கொரியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் இந்த ஊதிய உயர்வை உணர தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த முடக்கம் மனிதர்களின் உதவியின்றி  பணிவிடைகளை (service) பெறுவதற்கான பயிற்சிக் களமாக இருக்கிறது.
ஆகையால் பணிவிடை சார்ந்த ( Service & Hospitality Industries) வேலைகள் முற்றிலுமாக குறையும். கிட்டதட்ட 90 % வேலையிழப்பு இந்த துறையில் நிகழும்.

வளரும் நாடுகளில் மிகப்பெரிய ஊதிய இழப்பும், வேலைவாய்ப்பு இழப்பும் நிகழும். இதில் இந்தியா, பிரேசில் முதன்மையாக வீழ்ச்சியை எதிர்கொள்ளப் போகின்றன .இந்தியாவில் ஆந்திரா கேரளா, தமிழ்நாடு போன்றவை சிறிது காலம் தாக்குப் பிடிக்கலாம். நீண்ட கால நோக்கில் வீழ்ச்சியைத் தவிர்க்க இயலாது.

மியன்மார், வியட்நாம், இலங்கை, வங்காள தேசம் போன்றவை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிப் பாய்ச்சலுடன் விரையும். வளர்ந்த நாடுகளின் மனித வள பற்றாக்குறையை இந்த நாடுகள் தான் அடுத்த ஓரிரு தலைமுறைகள் நிறைவு செய்ய முயற்சிக்கும்.

கடந்த காலங்களில் Recession ( 2000-2001) மற்றும் Great Recession ( 2007-2009) பின்பு எழுச்சியில் இந்தியாவில் மிகுந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அதற்கு காரணம் அப்போதைய அரசியல் தலைமைத்துவமும், தென்மாநிலங்களில் ஏற்பட்டிருந்த வளர்ச்சிக்கான கட்டமைப்பும் சிறப்பானதாக இருந்தது.

2000- பின்பு ஏற்பட்ட முன்னேற்றங்களுக்குத்  தென் மாநிலங்களில் விடுதலைக்குப்  பின்பு இடப்பட்டிருந்த அடித்தளம் மிக முக்கிய காரணம்.

இந்தியாவில் அடுத்த இரண்டு தலைமுறைகளுக்கான எல்லாவிதமான வாய்ப்புகளும் மிகக் குறைவாக இருக்கும்,  இப்பொழுது இருக்கிற சானதான (வர்ண) நோய் பீடித்த அரசியல் தலைமைத்துவம் தான் இதற்கு முழு முதற் காரணம்.

உங்களுடைய தம்பிகளோ, தங்கைகளோ அல்லது அடுத்த தலைமுறை உறவுகளோ ... இந்த வீழ்ச்சியிலிருந்து தப்பிப் பிழைக்க அறிவு மற்றும் நுழைபுலன் ( Knowledge & intelligence)  சார்ந்த வேலைகளுக்குப் பயிற்சி எடுக்க ஊக்குவியுங்கள். எந்த துறையாக இருந்தாலும் இனிமேல் அறிவு மற்றும் நுழைபுலன் ( Knowledge & intelligence)  சார்ந்த ஊழியர்கள் மட்டுமே தேவைப்படுவார்கள்.







Related Posts with Thumbnails