திங்கள், 3 ஜூன், 2019

ஆண்மய்யச் சிந்தனையாளர்களின் அவசர கூட்டம்...!

வலைப்பதிவுலகில் ஈராயிரத்து சொச்சம் ஆண் பதிவர்கள் இருந்தாலும், 50 முதல் 60 பெண் பதிவர்கள் வூடுக்கட்டி அடிப்பதாலும்... சேதாரம் அதிகமாக இருப்பதாலும்... இனிமேலும் பொறுக்க இயலாது என்கிற முடிவில் தற்காத்துக்கொள்ளல்தகவமைத்துக்கொள்ளல் தொடர்பாக ஆண்மய்யச்சிந்தனையாளர்கள் அவசரமாக ரகசிய கூட்டம் கூட்டுவதென முடிவெடுத்து. நேற்றிரவு ரகசிய சந்திப்பை நடத்தினார்கள்.

வலையுலக சுனாமி யோனி கொண்டான் தலைமையேற்க... சிறப்பு விருந்தினராக அண்ணாச்சி கலந்துகொண்டார்எதிரணியிலிருந்து பெண்ணீயப்போர்வாள் திருமதி. செல்வி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவாற்றினார்கள்.

பெரும் எண்ணிக்கையில் வருகை தந்திருந்த சிந்தனையாளர்கள்... தலையில் துண்டுடன் வந்திருந்தனர். விசாரித்ததில் வெளியே தலைகாட்டினால் தலை தப்பாது என்று பேசிக்கொண்டனர்! திருமணமானவர்களே பெருமளவில் வந்திருந்தது மிகவும் கவனிக்கதக்கதாகயிருந்தது!.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பு அனைவரும் "ரகசியம் காப்போம்" என்கிற உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

யோனிகொண்டான் தனது தலைமையுரையைத் தொடங்கியவுடன் கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பால் உரையை நிகழ்த்தாமலேயே இருக்கையில் அமர்ந்தார்! விசாரித்ததில் எதிரணியினர் கலகத்திற்குக் கையூட்டு அளித்திருக்கலாம் என்று கவலை தெரிவித்தனர்! ஒரு குழுவினர் தலைவரே எதிரணியின் உளவாளி என்று குற்றஞ்சாட்டினர்!
Related Posts with Thumbnails